இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களமானது, இலங்கையில் இந்து மத விவகாரங்கள் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பான திணைக்களமாகச் செயற்படும் வகையில், 1985 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் திகதியின் (1985 / 123-12) என்ற இலக்க அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக, 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாந் திகதி அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.
நோக்கு
" முன்மாதிரியான நல்லொழுக்கமுள்ள ஒரு இந்து சமூகத்தை நோக்கி"
செயற்பணி
புத்தாக்கம், குழுப்பணி மற்றும் சமூக ஆதரவு மூலம் தரமான பயனாளர் மையத் திட்டங்களை வழங்குவதன் மூலம் இந்து சமயத்தைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் பரவச்செய்தல்.
குறிக்கோள்கள்
- ஒழுக்கப் பண்புகள் மற்றும் சமய விழுமியங்களின் வழி நடக்க இந்துச் சிறார்களுக்கிடையே இந்துசமயக் கல்வியை ஊக்குவித்தல்..
- இந்துசமயத்தையும் கலாசாரத்தையும் அபிவிருத்தி செய்து பேணுவதற்காக இந்துசமய நடைமுறைகளை பேணுதல்
- இந்துசமய கலாசார ஆராய்ச்சியை அபிவிருத்தி செய்தலும் இந்துசமய, கலை மற்றும் கட்டிடக்கலை தொடர்பான உயர்ந்த எண்ணத்தினை பொதுமக்களிடையே பரப்புலும்
- தமிழ் கலைஞர்களின் பங்களிப்புகளின் மூலம் தமிழ் கலைகளைப் பாதுகாத்து மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு கையளித்தல்.
- இந்து மரபுகளை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார, சமூக, மத மற்றும் ஆன்மீக வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக இந்து கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகளை ஊக்குவித்தல்.